இந்த வழக்கு நேற்றி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "லைக்கா நிறுவனம் ரூ. 4.90 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அல்லது இத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்யும் வரை, "தர்பார்" திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது" என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மனுதாரருக்கு 4 கோடி ரூபாய் தருவதாக, லைக்கா நிறுவனம் தரப்பில், நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனத்தின் இந்த முடிவை ஏற்றுகொண்ட நீதிமன்றம், தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
படத்தயாரிப்புக்காக ரூ.12 கோடியை லைக்கா நிறுவனம் வட்டிக்கு பெற்றிருந்தது.